காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காஷ்மீரில் அவந்திபுரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசாருடன் சேர்ந்து அந்த பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர்.
அவந்திபுராவின் டிரால் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்திய போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் சுற்றி வளர்த்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கொல்லப்பட்ட ஃசபீத் முஸ்தபர் ஃசபி மற்றும் உமர் தலி ஆகிய இரு பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் ஸ்ரீநகரில் கிராம பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள் எனவும் காஷ்மீர் போலீசார் கூறியுள்ளனர்.