ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக பிரிந்தன. இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 336 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பாதுகாப்பு படையினர் 81 பேர் மற்றும் பொதுமக்கள் 96 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இந்துக்கள் யாரும் காஷ்மீரில் இருந்து வெளியேற வில்லை. ஆனால் சமீபகாலத்தில் காஷ்மீரில் பெரும்பாலான இந்துக்கள் குடும்பத்தினர் காஷ்மீரிலிருந்து ஜம்முவுக்கு இடம்பெற்றுள்ளனர். இந்தக் குடும்பங்கள் அரசு பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.