உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி மற்றும் அண்டை மாநில நதிநீர் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் வாதாட தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மற்றும் அண்டை மாநில நதிநீர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாட 6 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது தமிழக அரசு.
அதாவது, மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சேகர் நாப்டே, வி.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.இளங்கோ மற்றும் வழக்கறிஞர்கள் உமாபதி, குமணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் பரிந்துரையை ஏற்று வழக்கறிஞர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..