தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டங்களின் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஓகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீருக்கும் மேல் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரை ஓரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அம்மாபேட்டை அருகில் உள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து இயங்கி வருகிறது. இந்நிலையில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரு மாவட்ட பொதுமக்களும் நெரிஞ்சிப்பேட்டை கதவணை பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். நெரிஞ்சிப்பேட்டையில் கதவனை மீன் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே காவேரி கரையோரத்தில் பொதுமக்கள் துணை துவைக்கவோ குளிக்கவோ வேண்டாம் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.