தென்காசியில் ஆண், பெண் இருபாலருக்கும் மராத்தான் போட்டி காவல்துறை சார்பில் நடைபெற்றுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பசுமை வலசை இயக்கம் மற்றும் காவல் துறை சார்பாக மராத்தான் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியை தென்காசி மாவட்டத்தின் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
அதனுடன் காவல் ஆய்வாளர் பாலமுருகன், பிரபு ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி குத்துக்கல்வலசை வழியாக சென்று கணக்கப்பிள்ளை வலசையில் முடிவடைந்தது. பெண்களுக்கான போட்டி குத்துக்கல் வலசயில் இருந்து அரமபித்து கணக்கப்பிள்ளை வலசையில் முடிவடைந்துள்ளது.
இந்த போட்டியில் ஆண்கள்,பெண்கள் என மொத்தம் 1,865 பேர் கலந்துகொண்டுள்ளனர். அதன்பின் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பையை வழங்கியுள்ளார்