Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

காவலாளி மீது தாக்குதல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

முதியவரை தாக்கி பணம் பறித்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள களரம்பட்டியில் சின்னகண்ணு என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் பனமரத்துப்பட்டி காந்திநகர் சினிமா தியேட்டர் பின்புறம் இருக்கும் பருப்பு மில்லில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் சின்னகண்ணு பணியில் இருந்தபோது 2 வாலிபர்கள் சுற்று சுவரை தாண்டி மில்லுக்குள் குதித்தனர்.

இதனையடுத்து மில்லில் இருக்கும் இரும்பு, பித்தளை, செம்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்து தருமாறு 2 பேரும் முதியவரை மிரட்டியுள்ளனர். அதற்கு சின்னகண்ணு மறுப்பு தெரிவித்ததால் 2 பேரும் அவரை தாக்கி 5 ஆயிரம் ரூபாய் பணம், கைக்கடிகாரம், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சின்னகண்ணு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பனமரத்துப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளியான சங்கர் என்பவர் முதியவரை தாக்கி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சங்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைவராக இருக்கும் மற்றொரு வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |