Categories
தேசிய செய்திகள்

கால்நடை மேய்க்கச் சென்ற மகளை… “துடிக்கத் துடிக்க அடித்துக் கொன்ற சிறுத்தை”… தந்தையின் கண்முன்னே நேர்ந்த கொடூரம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தந்தையின் கண்முன்னே சிறுத்தை சிறுமியை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், பாண்டிவாடா கிராமத்திற்கு அருகிலுள்ள கான்ஹிவாடா என்ற வனப் பகுதியில் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அரங்கேறியுள்ளது. 16 வயது சிறுமி ரவினா யாதவ் தனது தந்தையுடன் காட்டில் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியை பின்னாலிருந்து தாக்கிய சிறுத்தை, சிறுமியின் கழுத்தை பிடித்து இழுத்து சென்றது. ரவினாவின் தந்தை சிறுத்தையை குச்சியால் அடிக்க முற்பட்ட போது அவரையும் தாக்கியுள்ளது. இதையடுத்து அவர் கத்தி கூச்சலிட்ட காரணத்தினால் அருகிலிருந்த மக்கள் ஓடி வந்தனர்.

இதைப்பார்த்த சிறுத்தை சிறுமியின் உடலை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றது. அங்கிருந்தவர்கள் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுமியின் குடும்பத்திற்கு வனத் துறையினர் உடனடியாக 10,000 நிதி உதவி அளித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிறுமியை தாக்கிய சிறுத்தை பிடிப்பதற்கு கூண்டு வைத்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |