Categories
மாநில செய்திகள்

காலை 9 – இரவு 7 மணி வரை…. எந்தெந்த கடைகள் இயங்க அனுமதி…??

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதன பொருட்கள், போட்டோ வீடியோ கடைகள், சலவை கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி. கண்கண்ணாடி விற்பனை செய்யும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்,  காலணிகள் விற்பனை செய்யும் கடைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |