எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காளையார் கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள வரலாற்று புதினம் ‘காலா பாணி’ நாவல். இந்த ‘காலா பாணி’ நூலுக்கு சாகித்ய அகாடமி விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. மு ராஜேந்திரன் ஏற்கனவே எழுதிய ‘1801’ என்ற நாவலின் தொடர்ச்சியாகவே காலா பாணி நூல் எழுதப்பட்டுள்ளது. அதேபோல மொழி பெயர்ப்புக்கான விருது ‘யாத் வஷேம் ‘ நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் கே. நல்ல தம்பி மொழிபெயர்ப்பில் உருவானது யாத் வஷேம் நூல் ஆகும்.