தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு பள்ளிகள் 10 ஆம் தேதி திறக்கபடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் 9ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பொருந்தாது. சிபிஎஸ்இ பள்ளிகள் இன்று முதல் (அக்.,6) திறக்கப்படுகின்றன.