டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அலட்சியமாக இருக்கக்கூடாது.
காற்று மாசுபாடுக்கு விவசாயிகளின் வேளாண் கழிவுகள் மட்டுமே காரணம் என்று கூறுவது முறையானது அல்ல. வேளாண் பயிர்க்கழிவுகள் எரிப்பைப் பொறுத்தவரை, இரண்டு மாதங்களைத் தவிர அதிகம் இல்லை. இருப்பினும் விவசாயிகள் கழிவு பொருட்களை எரிப்பதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது 10 சதவிகிதம் தான், வாகனம், தொழிற்சாலை, கட்டுமான பணி, மின்சாரம் போன்றவைதான் மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்கள் என்று தெரிவித்தது. இதனை தொடர்ந்து காற்று மாசுபாட்டை கண்காணிக்கவும், விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பறக்கும்படை தேவை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.