காற்று மாசடைந்த 100 நகரங்களில் 63 இடங்களை இந்தியா நகரங்கள் பெற்றுள்ளது.
IQAir என்ற நிறுவனம் உலகில் காற்று மாசடைந்து நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிவாடி என்ற நகரமும் இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத்தும் உள்ளது. மேலும் நான்காவது இடத்தை பிடித்த தலைநகர் டெல்லி மிகவும் மாசடைந்த நகரங்களில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.
இதனை அடுத்து மிகவும் காற்று மாசடைந்த நகரங்களில் 63-க்கும் மேற்பட்டவை இந்தியாவில் உள்ள உத்தரபிரதேசம் மற்றும் அரியானா மாநிலத்தில்தான் இருக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சென்னையை தவிர அனைத்து மெட்ரோ நகரங்களிலும் காற்று மாசு கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.