Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கார்த்திகை சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜையை முன்னிட்டு கணபதி பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

இதனையடுத்து வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில்  திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |