Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரை முந்துவதற்கு முயற்சி…. பெயிண்டர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

கார்-மொபட் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெயிண்டர் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள சீராப்பள்ளி பகுதியில் கிருஷ்ணன், முருகேசன், இளவரசன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். பெயிண்டர்களான இவர் திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக ஒரு மொபட்டில் 3 பேரும் சென்றுள்ளனர். இந்நிலையில் எலச்சிபாளையம் காவல்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மொபட்-கார் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் மொபட்டை ஒட்டிய முருகேசன் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பின்னல் அமர்ந்திருந்த இளவரசன், கிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் காரை ஒட்டி வந்த வெங்கடேசன் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எலச்சிபாளையம் காவல்துறையனர் முருகேசன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |