Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரில் சென்ற நண்பர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்துரை அடுத்துள்ள பங்காருப்பளையம் பகுதியில் தரணிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வரும் இவர் தனது நண்பர்களான ஆனந்தன், மோகன்ராஜ், ஜம்பேர், நித்தியாஸ் ஆகிய 5 பேர் கரூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்த காரை மோகன்ராஜ் ஓட்டி வந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று அதிகாலையில் நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து அந்த கார் சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி அதே வேகத்தில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் தரணிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் காரில் இருந்த மற்ற 4 பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நல்லிபாளையம் காவல்துறையினர் உயிரிழந்த தரணிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |