Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“காரில் சென்றபோது கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்”… நான்கு பேருக்கு காயம்…!!!

காரில் சென்று கொண்டிருந்த பொழுது நிலைதடுமாறி மரத்தின் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலி.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் கொண்டாடுவதற்காக பேராசிரியர் தேவராஜ், சென்னை ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்த சத்தியநாராயணன்(24) அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர்களான அரவிந்த், கார்த்திபன், ருத்ரமூர்த்தி உள்ளிட்ட 5 பேரும் அம்முண்டி வழியாக திருவள்ளூர் சென்று கொண்டிருக்கும் பொழுது காரை ஓட்டி சென்ற பேராசிரியர் தேவராஜ் சாலை திருப்பத்தில் தடுமாறி சாலையின் ஓரமாக இருந்த ஒரு மரத்தின் மீது மோதியதால் காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த சத்யநாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்ற 4 பேரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். விபத்தில் பலியான சத்யநாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றி திருவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

 

Categories

Tech |