மும்பை அருகில் நேற்று நடைபெற்ற சாலைவிபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இறந்தார். இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்த நபர் திடீரென்று ஏற்பட்ட கார் விபத்தில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த காரணத்தால் பலியான சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “நாம் அனைவரும் நம்முடைய குடும்பங்களுக்கு கடன்பட்டு இருக்கிறோம்” என்ற உறுதிமொழியை வெளியிட்டார்.
அத்துடன் அந்த உறுதிமொழியை நீங்கள் அனைவரும் எடுக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். காரின் பின் இருக்கையில் இருக்கும்போது கூட என் சீட்பெல்ட்டை எப்போதும் அணிவதில் உறுதியாக இருக்கிறேன். சாலையில் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தங்களது பாதுகாப்பை முடிந்த அளவுக்கு உறுதிசெய்ய வேண்டும் என்று பொருள்பட அவர் உறுதிமொழியை வெளியிட்டு, அனைத்து மக்களும் அதனை பின்பற்ற கோரிக்கை வைத்துள்ளார்.