Categories
மாநில செய்திகள்

“காய்ந்த, கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை உடனே அகற்றுங்க”….. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில தினங்களாக அவ்வபோது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. அப்போது திடீரென்று மரங்கள் சாய்ந்து விழுவதால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்களால் சில நேரங்களில் பொதுமக்களுக்கு காயங்களும் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் இருக்கும் மரங்கள் மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும். கீழே விழுந்த மரங்களை அகற்ற தேவையான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |