Categories
தேசிய செய்திகள்

“காப்பி அடித்ததாக கூறி ஆசிரியர் செய்த செயல்”…? அவமானத்தில் தீக்குளித்த மாணவி… பெரும் பரபரப்பு…!!!!!

காப்பி அடித்ததாக கூறி மாணவியை ஆசிரியர் நிர்வாணமாகியதால் அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம்  ஜாம்ஷெட்பூரில் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகப்பட்ட ஆசிரியர் ஒருவர் தன்னுடைய ஆடைகளை கழற்றச் செய்து நிர்வாணமாகியதால் மாணவி ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி போலீசார் வெளியிட்டு தகவலின்படி, மாணவி தன்னுடைய சீருடையில் மறைத்து வைத்து காகித சீட்டுகளை எடுத்து சென்றிருக்கலாம் என ஆசிரியர் சந்தேகப்பட்டு இருக்கின்றார்.

இதனால் மாணவியின் சீருடைகளை கழற்றி நிர்வாணமாக்கி உள்ளார் மாணவி தனது வாக்குமூலத்தில் ஆசிரியர் தன்னை அவமானப்படுத்தியுள்ளதாகவும் கடுமையாக எதிர்த்த போதிலும் சீருடையில் காப்பி சீட்டுகளை மறைக்கிறாய் என சோதிக்க வகுப்பறை ஒட்டியுள்ள அறையில் தனது ஆடைகளை கழற்ற செய்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த ஆசிரியருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் பள்ளியில் இருந்து வந்த சிறிது நேரத்திலேயே அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்ததாக மாணவியின் தாய் புகாரில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |