Categories
உலக செய்திகள்

காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாய்…. கண்காணிக்க பொருத்திய சிசிடிவி…. மகன் பார்த்த அதிர்ச்சி தரும் காட்சி…!!

காப்பகத்தில் தங்கியிருந்த வயதான பெண்மணியிடம் அங்குள்ள ஊழியர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் மறதி நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை அங்குள்ள காப்பகத்தில் தங்க வைத்துவிட்டு அவர் வேலைக்காக வெளியில் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் தனது தாய் தங்கியிருந்த அறையில் சிசிடிவி கேமராவை பொருத்தி வைத்து அவரின் உடல் நலத்தை அவ்வபோது அந்த நபர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் அவர் சிசிடிவி வழியாக தனது தாயை கவனித்துக் கொண்டிருக்கும் போது அந்த அறைக்குள் வந்த காப்பக ஊழியர் ஒருவர் அவரது தாயாரிடம் ஆடைகளை கழட்டி தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன் அங்கிருந்து ஸ்பீக்கர் மூலம் அந்த ஊழியரை உடனடியாக நீ செய்யும் தவறை நிறுத்து என கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த காப்பக ஊழியரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |