Categories
தேசிய செய்திகள்

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே வெடிகுண்டு தாக்குதல்… இந்தியா கடும் கண்டனம்…!!!

காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விடுவோம் என்ற நம்பிக்கையில் காபூல் விமான நிலையத்தில் 12 நாட்களாக பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை அமெரிக்க ராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை தலிபான்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

விமான நிலையத்திற்கு வெளியே உள்ள மக்கள் அந்த பகுதியை காலி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தின வருகின்றது. இதற்கிடையில் நேற்று இரவு இரட்டை குண்டுவெடிப்பு விமான நிலையத்தில் நிகழ்ந்தது. இதில் ஏராளமானோர் மக்கள் தூக்கி வீசப்பட்டனர். முதற்கட்டமாக 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |