காதல் தோல்வியினால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பெல் நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கரிகாலன் காதலித்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கரிகாலன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அரளி விதையை அரைத்துக் மதுவில் கலந்து குடித்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த கரிகாலனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கரிகாலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.