Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை… சந்தேகத்தை ஏற்படுத்திய செல்போன் அழைப்பு…. போலீஸ் விசாரணை…!!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாகூர் பகுதியில் பிளம்பரான ஆனந்த்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் சுஜிலா(28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் சுசிலா நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுஜிலா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுஜிலாவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து சுஜிலா இறந்த பிறகும் அவரது செல்போனுக்கு அழைத்த வாலிபர் கோபமாக பேசினார். எனவே அந்த வாலிபரின் தொல்லையால் சுஜிலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |