பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவாடி கிராமத்தில் நடராஜன் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு விஜயா(23) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜயா சிலம்பரசன்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் விஜயா எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து இறந்துவிட்டார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விஜயாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.