காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா(22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த சௌந்தரராஜன்(25) என்பவரை பவித்ரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கூறவில்லை. இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பவித்ராவுக்கும், சவுந்தரராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பவித்ராவும், அவரது கணவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கணவன் மனைவி இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.