Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி கிருஷ்ணாபுரத்தில் எலக்ட்ரீசியனான முனுசாமி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி(29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நர்சாக வேலை பார்த்த மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு பணிக்கு செல்லவில்லை. நேற்று அதிகாலை மகாலட்சுமி திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மகாலட்சுமியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |