காதல் கொண்டேன் மற்றும் தனது கேரியர் பற்றி சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
பிரபல நடிகையான சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்து தான் நடித்த திரைப்படங்களில் வெற்றி பெற்றார். தற்பொழுது தமிழில் நடிக்காதது இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் காதல் கொண்டேன் திரைப்படம் மற்றும் தனது கெரியர் பற்றி சோனியா அகர்வால் கூறியுள்ளதாவது, காதல் கொண்டேன் படத்தின் ஹீரோவான தனுஷை பார்த்ததுமே என்னுடைய அம்மா உனக்கு இந்த படம் வேண்டாம் என கூறிவிட்டார். அந்த பையன் ஒல்லியா இருக்கான். உங்களுக்கு இடையே சரிபட்டு வராது என கூறினார். ஆனால் எனக்கு கதை மிகவும் பிடித்திருந்ததால் அம்மாவையும் மீறி படத்தில் நடித்தேன். நான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் பொழுது ஹீரோ யார் என்று பார்க்காமல் கதை நன்றாக இருக்கின்றதா என்பதை மட்டுமே பார்ப்பேன் என கூறியுள்ளார்.