பிரபல நடிகை தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பற்றி கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக சமந்தா வலம் வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிகள் திடீரென விவாகரத்து செய்து கொண்டனர். இதற்கான காரணம் குறித்து இருவரும் வெளியிடவில்லை. இவர்கள் 2 பேரும் விவாகரத்துக்கு பிறகு தங்களுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். இவர் தன்னுடைய விவாகரத்துக்கான காரணத்தை பற்றி கூறியது டிவியில் ஒளிபரப்பப்படுமா என்பது தெரியவில்லை. மேலும் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.