உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த விகாஸ் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். சென்னையில் சிறிது காலம் பணியாற்றி அதன்பிறகு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் வெளிநாட்டிற்கு சென்று மருத்துவ படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார். அப்போது பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தனர்.
இவர்களின் காதல் தொடர்பாக இருவீட்டாருக்கும் தெரிவிக்கப்பட்டு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இன்னும் சில மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி விகாஸ் ராஜன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். நடந்த சம்பவம் குறித்து விகாஸின் காதலை மற்றும் அவரது நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. மருத்துவர் விகாஸ் தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போலி ஐடி ஒன்றை உருவாக்கி பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.
அந்த புகைப்படங்களை சில நண்பர்களுக்கும் அவர் பகிர்ந்துள்ளார். விகாஷின் காதலி தனது நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு ஜாலியாக தான் இதை செய்தேன். நீ பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறினார். ஆனால் ஆத்திரம் தாங்காமல் அவர் விகாஸ் உடன் சண்டை போட்டனர். அத்துடன் விகாசை பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்ட அவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து விகாசை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த விகாஸ் சிகிச்சை பலன் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விகாஸின் காதலி மற்றும் அவரது மூன்று நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.