கனடாவில் பொழுதுபோக்குக்காக ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காதர்களின் வலையில் 159 கிலோ எடையுள்ள வாழும் டைனோசர் என்று அழைக்கப்படும் ஸ்டர்ஜன் மீன் சிக்கியது.
கனடாவின் ஆல்பெர்ட்டா பகுதியில் பிரேடன் ரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொழுதுபோக்குக்காக ஆல்பர்ட்டா பகுதியிலுள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவரது வலையில் 8 அடி நீளமுள்ள மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கி உள்ளது. இதையடுத்து அவர் உடனே அதனை வெளியே எடுக்க முயற்சி செய்தார். எனினும் அவரால் அந்த மீனை எடுக்க இயலவில்லை. அதன்பின் அரைமணி நேரம் போராத்திற்கு பின் அந்த மீனை கரைக்கு கொண்டு வந்தார்.
அவ்வாறு கரைக்கு வந்து சேர்ந்ததும் சிக்கிய மீனை வெளியே எடுக்க முயற்சி செய்த போதுதான் தூண்டிலில் ஸ்டர்ஜன் எனப்படும் மிகப்பெரிய மீன் சிக்கி இருந்ததை அறிந்து சந்தோஷத்தில் அவர் துள்ளி குதித்தார். அதுமட்டுமல்லாமல் இது குறித்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். அதாவது வாழும் டைனோசர் மீன் என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மீன் 8 அடி 6 அங்குலம் நீளம் மற்றும் 159 கிலோ எடையுடன் இருந்திருக்கிறது. தற்போது இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.