சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு திருட்டு, விபச்சாரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுதல் அல்லது கைகளை துண்டித்தல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் “ஒயிட்நைல் மாகாணத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் விவாகரத்து பெற்ற அந்த இளம் பெண் மற்றொரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை அந்த பெண்ணின் உறவுக்காரர் ஒருவர் பார்த்து ஆத்திரமடைந்து அந்த வாலிபரை கொலை செய்துள்ளார்.
திருமணத்திற்கு பின் கணவர் அல்லாமல் மற்றொரு ஆளுடன் நெருக்கமாக இருந்ததன் காரணத்தினால் அந்த பெண் மீது விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”. இந்த வழக்கை விசாரித்த கோர்ட் அந்த பெண்ணை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு சர்வதேச அளவுகள் எதிர்ப்புகள் வலுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தண்டனை வாபஸ் பெறப்பட்டு வழக்கு மறுவிசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையின் போது அந்த பெண் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்தபோது முத்தமிட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து கோர்ட் அந்த பெண்ணிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.