Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன தந்தை….. வாளிக்குள் அழுகிய நிலையில் மகள்….. இது தான் காரணமா….? பகீர் சம்பவம்….!!!!!

பெற்ற மகளை கொலை செய்த வாலிபரை  போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் காளிமுத்து-பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து  வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த ஒரு வாளியில்  அழுகிய நிலையில் சிறுமியின் கை, கால் கட்டப்பட்ட நிலையில் பிணம் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த சிறுமியின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்துவை கைது செய்தனர். மேலும் இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது.  காளிமுத்து பிரியதர்ஷினி மீது சந்தேகப்பட்டு சில வருடங்களாக தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல் கடந்த இரண்டு வாதங்களுக்கு முன்பு தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த காளிமுத்து தனது மகளிடம் சொல்லி புலம்பியுள்ளார். அதற்கு அந்த சிறுமி நாம் இருவரும் சாகலாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் பேச்சை கேட்ட காளிதாஸ் தனது மகளை  கொலை செய்து வாளியில் வைத்துவிட்டு ரயிலில் விழுந்து சாகலாம் என முடிவு செய்துள்ளார். ஆனால் பயத்தில் சாக முடியாமல் சுற்றி திரிந்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |