காங்கிரஸ் பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் பாரதி நகர் 2-ஆவது தெருவில் வசித்து வருபவர் கே.பி.துரை. இவர் திருவொற்றியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் பொருளாளராக இருக்கிறார். ராஜீவ் காந்தி நகர் 1-ஆவது தெரு மெயின் ரோட்டில் சொந்தமாக வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் கே.பி.துரை கடந்த 23-ஆம் தேதியன்று வழக்கம் போல இரவு கடையை அடைத்துவிட்டு தன்னுடைய காரை கடை முன் நிறுத்தி விட்டு வீட்டிற்கு வந்து விட்டார்.
இதனையடுத்து நேற்று காலை கடைக்கு சென்று பார்த்த போது அவரின் காரின் கண்ணாடியைஅடித்து நொறுக்கி விட்டு, மர்ம கும்பல் கடைக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பழைய பொருளான பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை நடுரோட்டில் வீசி எறிந்து விட்டு சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம கும்பல் யார் என விசாரித்து வருகின்றனர்.