சுற்றுசூழல் விஷயத்தில் நாம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தற்போது கூறியிருக்கிறார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு விவகாரத்தில் நடிகர் சூர்யா டுவிட்டரில் இந்த பதிவினை போட்டுள்ளார். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை குறித்து ஏற்கனவே அவருடைய சகோதரர் கார்த்திக் திருக்குறளை மேற்கோள் காட்டி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை நடிகர் சூர்யா சிவகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் மிக ஆபத்தானது காக்க காக்க சுற்றுச்சூழல் காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
அவருடைய படம் காக்க காக்க அதை அவர் சுட்டிக்காட்டி தற்போது ட்விட் செய்துள்ளார். அதே போல வெற்றிவேல் வீரவேல் போன்ற வசனங்கள் எல்லாம் நினைவூட்டும் வகையில் இந்த ட்விட்டை அவர் போட்டுள்ளார்.
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. #EIA2020 https://t.co/le0hgpzHPX
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2020