ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட துவங்கியுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு வாரியம் டிஆர்பி வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்பட இருப்பதாகவும் இந்த தேர்வை எழுத தகுதியானவர்கள் நாளை (மார்ச் 14) முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் டிஆர்பி அறிவித்துள்ளது.
ஏப்ரல் 13 வரை ஒரு மாதத்திற்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு வாரியம் கூறியுள்ளது. முந்தைய நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வியக்கத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.