Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை அதுக்கு ஒன்னும் ஆகல… வாயில்லா ஜிவனின் போராட்டம்… உயிருடன் மீட்ட பொது மக்கள்…!!

குளித்தலை பகுதியில் மாடு கழிவு நீர் குழியில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் பசு மாடு ஒன்று தெருவோரம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் கழிவு நீர் தேங்கியிருந்த குழியில் விழுந்த மாடு வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அதை மீட்க வழித் தெரியாமல் இருக்க அங்கு வந்த ஒருவர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தார்.

இதனையடுத்து  மாடு விழுந்து குழியின் அருகே சிறிய குழி தோண்டப்பட்டு பின் பொதுமக்கள் முயற்சியுடன் கழிவுநீர் குழியில் விழுந்த மாட்டை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து  மீட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |