ஆசிரியரின் கைப்பையில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி பார்வதிபுரம் பகுதியில் ஆசிரியரான சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் மணமகன் அறையில் சித்ரா தனது கைப்பையை வைத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து திரும்பிவந்து பார்த்தபோது கைப்பையில் இருந்த 5 பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் 8000 ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சித்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.