Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கள்ள துப்பாக்கி மூலம் கடமான் வேட்டை”… 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து 4 பேர் கைது…!!!!

கூடலூர் அருகே 50 கிலோ கடமான் இறைச்சி மற்றும் கள்ள துப்பாக்கியை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் இருக்கும் பால்மேடு என்ற இடத்தில் ஒரு கும்பல் கள்ளத்தொப்பாக்கி மூலமாக கடமானை வேட்டையாடியதாக போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் பால்மேடு பகுதியில் ரகசியமாக கண்காணித்த பொழுது நான்கு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் இரண்டு முட்டைகளை தூக்கிக்கொண்டு வந்ததை பார்த்து  அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் பாலகிருஷ்ணன், மைக்கேல், புஷ்பராஜ், அருண் உள்ளிட்டோர் என தெரிய வந்தது.

இவர்கள் வைத்திருந்த மூட்டைகளில் கடமான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் கள்ளத்துப்பாக்கி மூலமாக கடப்மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்ததையடுத்து அவர்கள் வைத்திருந்த 50 கிலோ கடமான் இறைச்சி, கள்ள துப்பாக்கி, தோட்டாக்கள், டார்ச் லைட்டுகள், கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |