கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனை அடுத்து அந்தப் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி வள்ளி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா போன்ற ஐந்து பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த மனுவை கீழ் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதனை அடுத்து ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தாளாளர், செயலாளர், முதல்வர் போன்றோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய கோரி மாணவி ஸ்ரீமதியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு செய்திருக்கின்றார். மேலும் பள்ளி நிர்வாகிகள் மூன்று பேர் ஆசிரியர்கள் இரண்டு பேருக்கு அளித்த ஜாமினீர் ரத்து செய்யவும் மாணவி மரணத்தில் ஜிம்பர் மருத்துவ குழு ஆய்வு அறிக்கையை தர மறுத்ததை எதிர்த்தும் ஸ்ரீமதியின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கின்றார்.