கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு திடீரென்று திருமணம் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
அதிமுகவின் இளம் எம்.எல்.ஏ-வான பிரபு தியாக விருவத்தை சேர்ந்த கோவில் அர்ச்சகர் சாமிநாதன் என்பவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று காலை இளம் பெண்ணை எம்.எல்.ஏ பிரபு திருமணம் செய்து கொண்டார். கள்ளக்குறிச்சியில் உள்ள இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க மிக எளிமையான முறையில் எம்.எல்.ஏ பிரபுவின் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சித்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக எம்.எல்.ஏ வீண் திடீர் திருமணமும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை தற்கொலைக்கு முயன்றதும் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.