Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு…. பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி…. வெளியான பகீர் தகவல்….!!!!!

ஆந்திரமாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்த்தில் வசித்து வருபவர் ஜமீல் (45). இவர் பைக்கில் அவரது மகள் வீடு அமைந்துள்ள வல்லபீக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது வல்லபீ கிராமத்தின் அருகில் சாலையில் ஒருவர் லிப்ட்கேட்டார். அதனை பார்த்த ஜமீல் பைக்கை நிறுத்தி அவரை ஏற்றிக்கொண்டு மீண்டும் வேகமாக சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் பின்னாடி இருந்த நபர் திடீரென்று ஜமீலின் முதுகில் ஊசிபோட்டார். தன் முதுகில் குத்தியதை உணர்ந்த ஜமீல் பைக்கை நிறுத்த முயற்சி செய்தார். எனினும் லிப்ட் கேட்டு வந்தவர் வாகனத்தை நிறுத்துவதற்குள் இறங்கி தப்பிஓடிவிட்டார். அவ்வாறு அந்த நபர் தப்பி ஓடுவதற்கு முன்பாக ஊசி போட பயன்படுத்திய சிரிஞ்சை சாலை ஓரத்தில் வீசிவிட்டு சென்றார்.

அதனைப் பார்த்த ஜமீல் தனக்கு ஊசி போட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே செல்போன் வாயிலாக தன் மனைவிக்கு தெரியப்படுத்தினார். அப்போது மனைவி உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அதற்குள் ஜமீலுக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. அவ்வழியாக செல்வோரிடம் நடந்த விஷயங்களை கூறி உதவிகேட்டார்.  அதன்பின்  சிலர் 108 ஆம்புலன்சு வரவழைத்தனர். இருப்பினும் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஜமீல் இறந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இப்போது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாவது “ஆந்திர மாநிலம் கம்பம் மாவட்டம் சித்தகானி பகுதியை சேர்ந்தவர் ஷேக் ஜமால் சாயபு என்ற ஜமீல். இவருடைய மனைவி ஷேக் இமாம்பீ (46). இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.

மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இதனிடையில் இமாம் பீ-க்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன்ராவ் என்பவருக்கும் இடையில் கள்ளக்காதல் இருந்துவந்தது. இமாம் பீ, மோகன் ராவுடன் வீட்டில் தனிமையில் இருந்தபோது அவரது கணவர் ஷேக்ஜமால் சாயபு பார்த்து விட்டார். இதனால் கோபமடைந்த அவர் மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்துவந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாகவுள்ள கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என கள்ளக்காதலன் மோகன் ராவிடம் இமாம் பீ தெரிவித்தார். அதனை தொடர்ந்து கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்த அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ரூபாய்.3500 கொடுத்து 2 ஊசிகளை வாங்கி வந்தனர்.

இமாம் பீ ஒரு ஊசியும், மோகன் ராவிடம் ஒரு ஊசியும் வைத்துக் கொண்டனர். இமாம் பீயால் கணவருக்கு விஷ ஊசி போடமுடியாத சூழ்நிலை நிலவியது. அதன்பின் இமாம் பீ தன் மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கிருந்து கணவருக்கு போன்செய்து நாளை மகள் வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார். இது பற்றி மோகன்ராவிடம் தெரிவித்த இமாம் பீ, அவர் வரும் வழியில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிக்கொண்டு விஷ ஊசி போட்டு கொல்லவேண்டும் என திட்டம்போட்டு கூறினார். மோகன்ராவ் தன் நண்பர்களான வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த் சாம்பசிவ ராவ் போன்றோருடன் சேர்ந்து மதிகொண்ட மண்டலம் அருகில் பைக்கில் காத்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஷேக் ஜமால் சாயபு பைக்கை நிறுத்தி லிப்டு கேட்டு வெங்கடேஷ் பைக்கில் ஏறிக்கொண்டார். பின் போகும் வழியில் ஷேக் ஜமால் சாயபுக்கு இடுப்பில் விஷ ஊசியை செலுத்திவிட்டு வெங்கடேஷ் தப்பிச்சென்றார். இதில் மயங்கிசரிந்த ஷேக் ஜமால் சாயபு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இமாம் பீ செல்போன் எண்ணை ஆய்வு மேற்கொண்டபோது அவர் அடிக்கடி மோகன் ராவிடம் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து ஷேக் இமாம் பீ, அவரது கள்ளக்காதலன் மோகன் ராவ், அவரது நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |