தெலங்கானா மாநிலம் பத்தாதிரியில் வேறு ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்த கணவரை அவர்களது வீட்டிற்கே சென்று மனைவி புரட்டி எடுத்து சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொத்தகூடாம் பகுதியில் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றிவருபவர் ராஜு. 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவருக்கு 9 வயதில் மகன் உள்ளார். கடந்த ஒரு ஆண்டாகவே வீட்டிற்கு சரியாக செல்லாததால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ராஜு தான் வசிக்கும் அதே பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி, உறவினர்கள் உதவியுடன் ரகசியமாக அவர்களது வீட்டிற்குள் புகுந்து கணவரையும், அவரது காதலியையும் புரட்டி எடுத்தனர்.
இதனையடுத்து கணவரும் ராஜுவும், அவரது கள்ளக்காதலியும் உறவினர்கள் உதவியுடன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது