Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 12 லட்சத்திற்கு விற்பனை….!!

பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ் சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 12 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ் சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 10,699 ரூபாயில் இருந்து 13,019 ரூபாய்க்கும், டி.சி.எச் ரக பருத்தி 10,700 ரூபாயில் இருந்து 11,909 ரூபாய்க்கும், கொட்டு ரக பருத்தி 5,900 ரூபாயில் இருந்து 7,800 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏலத்தில் மொத்தம் 12 லட்சம் வரை பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

 கொட்டு பருத்தி
இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.10,699-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.13,019-க்கும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.10,700 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,909-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5,900 முதல் அதிகபட்சமாக ரூ.7,800-க்கும் ஏலம் போனது.

Categories

Tech |