கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் சேர்ந்து பின்னர்விலகிய மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திருப்பித்தர கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கொடுக்காமல் செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2020 – 2021 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு விளக்கம் அளித்துள்ளது.
Categories
கல்வி கட்டணத்தை திருப்பி தர உத்தரவு – நாடு முழுவதும் அறிவிப்பு …!!
