Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது….. எதற்கு தெரியுமா?…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் இவர் பொள்ளாச்சி பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 4 பேர் கொண்ட கும்பல் அருண்குமாரை ஆர். பொன்னாபுரம் வாயிக்கால் மேடு பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவரை கத்தியை காட்டிமிரட்டி பணம் கேட்டு உள்ளனர். ஆனால் அருண்குமாரிடம் பணம் இல்லாததால் அந்த கும்பல் ரூ.15,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது. இதற்கிடையில் அருண்குமார் தப்பி ஓடி கும்பல் வைத்திருந்த பேக்கை பறித்துக் கொண்டார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் அருண்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களிடமிருந்து கிடைத்த பேக்கை போலீசார் திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த நோட்டு புத்தகங்களில் முகவரி இருந்தது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆர். பொன்னாப்புரத்தை சேர்ந்த சேர்ந்த சரவணகுமார், மணிகண்டன் மற்றும் 17 வயதுடைய தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் என்பதை தெரியவந்தது. இதனையடுத்து ஆ.சங்கம்பாளையத்தில் செல்லும் சாலையில் அருண்குமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரும் அருண்குமாரிடம் மது வாங்கி தருவதாக கூறி பொன்னாப்புரம் வாய்க்கால் மேட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளனர். அதன் பிறகு ஆர் பொன்னாபுரத்தை சேர்ந்த செல்வகுமார், மணிகண்டன் ஆகியோரை வரவழைத்து அருண்குமாரிடம் செல் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றதும், செலவுக்கு பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இது குறித்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |