Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவனை துன்புறுத்திய சக மாணவர்கள்…. விரக்தியில் ரயில் முன் பாய்ந்த மாணவர்…. பரபரப்பு….!!!!

சக மாணவர்கள் கேலி செய்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்துவந்தார். இவர் அங்குள்ள  கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் குமார் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சக மாணவர்கள் குமாரை கேலி செய்ததாக தெரிகிறது.

இதனால் மிகவும் மனமுடைந்த குமார் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |