Categories
மாநில செய்திகள்

கல்லணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு…. வெளியான தகவல்…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் ஜூன்-12 ஆம் தேதி  திறந்து வைத்தார். இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட அந்த தண்ணீரானது இன்று மாலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்துக் கல்லணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விடப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |