Categories
சினிமா தமிழ் சினிமா

“கல்யாணம் பண்ணாமலும் ஹேப்பியா இருங்காங்க”… என் மகிழ்ச்சிக்கு நானே பொறுப்பு…. நடிகை ஆண்ட்ரியா ஸ்பீச் ….!!!!

நடிகை ஆண்ட்ரியா பிசாசு-2, அனல் மேலே பனித்துளி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அத்துடன் அவருக்கு 5 படங்கள் கைவசம் இருக்கிறது. இந்நிலையில் ஆண்ட்ரியா பேட்டியில் அளித்ததாவது, ”கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்கள் தற்போது அதிகம் வருகிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

இந்நிலைமை தொடர வேண்டும் என விரும்புகிறேன். இப்போது வெற்றிமாறன் தயாரிப்பில் கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசனுடன் நான் நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படத்திலும் எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்தது. சிறிய நகரத்திலிருந்து சென்னைக்கு வரும் பெண்ணுக்கு நேரும் துன்பமும், அதில் முடங்காமல் என்ன செய்கிறாள் என்பதும்தான் கதை.

இது போன்ற கதைகளில் கதாநாயகிகளால் மட்டுமே நடிக்கமுடியும். அதேபோல் கதாநாயகிகளை முதன்மைப்படுத்தும் கதை அம்சம் உள்ள படங்கள் நிறைய உருவாகவேண்டும். திருமணமானால் தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று இல்லை. திருமணமான பல பேர் மகிழ்ச்சியாக இல்லை. திருமணம் செய்துகொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என தெரியாது. எனினும் என் மகிழ்ச்சிக்கு நானே தான் பொறுப்பு” என்று கூறினார்.

Categories

Tech |