இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. அதனால் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையில் இருந்து ராணுவ பாதுகாப்புடன் மஹிந்த ராஜபக்ஷ வெளியேறினார். கொழும்பு வீதிகளில் போராட்டத்தால் பதற்றம் நீடிக்கும் சூழலில் உயிருக்கு பயந்து வெளிநாட்டிற்கு அவர் தப்பிச் செல்ல உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அவரின் மகன்களில் ஒருவர் நேற்று சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.இந்நிலையில் மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் நடந்த வன்முறையில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இலங்கையில் போராட்டக்காரர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் மோதலின் பிரதேச சபையின் தலைவர் சரத்குமார் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்ட களத்தில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாடே கலவர தேசமாக காட்சியளிக்கிறது.