தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு தேர்வாணையம் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம் சித்தார்த்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் குரூப் 4 பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்று 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து தேர்வாணையம் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் கலப்புத் திருமணம் செய்தோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வேலைவாய்ப்பாக மூலமாக நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்து அவருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தேர் பானைய உள்ளிட்ட தேர்வு முறைகளில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து பணி விதிகள் தொடர்பாக பொதுநல வழக்கு தொடர முடியாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.